சந்திர ஒளிதனில்
சுந்தர விழிகளால்
மந்திரம் இல்லாமலொரு
தந்திரம் செய்ததென்ன..
அந்த இந்திரஜாலத்தில்
என்னைத் தொலைத்து
இன்னும்
இதயம் வலிப்பதென்ன..
மாலை மயக்கத்தில்
தேன்சுவை இதழ்களால்
தீஞ்சுவை போலொரு
வார்த்தை வடித்ததென்ன..
அந்தக் காவியவார்த்தை
கண்களைக் கட்டி
காலங்கள் தோறும்
கண்ணீர் விடுவதென்ன..
காரிருள் வேளை
மோகத்து முன்னிரவில்
மேகம்போல் மென்மையாய்
காதல் வரைந்ததென்ன..
அந்தக் காதல்கவிதை
காணாமல் போய்
வாழ்வில்
வருந்தித் துடிப்பதென்ன..
2 comments:
அந்தக் காதல்கவிதை
காணாமல் போய்
வாழ்வில்
வருந்தித் துடிப்பதென்ன..
//
super,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரை சரவணன்..
Post a Comment